உணவாக்கல்


              ஒவ்வொரு உணவையும் ஒவ்வொரு விதமாக சமைத்தல் வேண்டும். தமிழர்கள் உணவுகளை விதம் விதமாகச் சமைக்கின்ற வல்லமை உள்ளவர்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் உங்களுக்குச் சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது.  உணவை சமைக்கின்ற விதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரினை இட்டு வழங்கியுள்ளனர் நம் முன்னோர்கள்.  இங்கு சமைக்கின்ற முறையும் அதற்கு வழங்கப்படும் பெயர்களையும் கொடுத்துள்ளேன்.

அவித்தல்  - ஆவியால் வேகச் செய்வது இது. இது மூவகையாகும். குழாய் முதலியவற்றுள் செலுத்தி பிட்டு முதலியன அவிப்பது பெய்தவித்தல் என்றும் முகந்து இட்டு, இட்லி போன்றவற்றை அவிப்பது இட்டவித்தல் என்றும் கட்டை, துணித் துளைகளின் வழிப்பிழிந்து இடியாப்பம் போன்றவற்றை அவிப்பது பிழிந்தவித்தல் என்றும் சொல்லப்படும்.

இடித்தல் - அசி முதலியவற்றை மாவாகவோ அன்றி அவலாகவோ இடித்து ஆக்குவது இடித்தல் என்று சொல்லப்படும்.

கலத்தல் - பல பண்டங்களைக் கலந்து நீர்மோர் போன்றவற்றை ஆக்குவது கலத்தல் என்று சொல்லப்படும்.

காய்ச்சல் -  கஞ்சி, பால் போன்றவற்றைச் சூடேற்றிப் பக்குவம் செய்தல் காய்ச்சல் என்று சொல்லப்படும்.
கிண்டல் -  நீலோ அன்றி நெய்யிலோ குறிப்பிட்ட பண்டத்தையிட்டு நீர் வற்றக் கிண்டிக் கொண்டேயிருந்து களி, கும்மாயம் போன்றவற்றை ஆக்குதல் கிண்டல் என்று சொல்லப்படும்..

கிளறுதல் -  தாளித்த பின் அதனுடன் அவல், பயறு போன்றவற்றை இட்டு, தாளிப்பும் தாளிக்கப்படுவதும் கலந்து விளங்குமாறு செய்வது கிளறுதல் என்று சொல்லப்படும்.

சுடுதல் -  அப்பளம், சோளம், பனம்பழம் முதலியவற்றை நேரடியாக நெருப்பின் தணலிலிட்டு வேகுமாறு பக்குவம் செய்தல் சுடுதல் என்று சொல்லப்படும்.

தித்தல் - பாலில் பிறை மோட்டுத் தயிராக மாறச் செய்வது போன்றவை தித்தல் என்று சொல்லப்படும்.

துகைத்தல் -  ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்டங்களை நசுக்கிக் கலந்து ஒன்றாகி விடுமாறு மல்லித் துகையலைப்போலச் செய்வது துகைத்தல் என்று சொல்லப்படும்.

துவட்டல் -  நீல் வெந்த வாழைப்பூ, கீரை போன்றவற்றைத் துவண்டு செறியுமாறு பக்குவப்படுத்துவது துவட்டல் என்று சொல்லப்படும்.

பிசைதல் -  வேங்கைமா, தயிர்ச்சோறு முதலியவற்றை அவ்வவற்றிற்குயவற்றைப் பெய்தும் தூவியும் கையால் நன்கு குழைந்து கலக்குமாறு பிசைவது பிசைதல் என்று சொல்லப்படும்.

பிழிதல் -  தேனடை, பழம் முதலியவற்றின் சாற்றைக் கையால் அல்லது துணி முதலியன கொண்டு சாறு வரச் செய்தல் பிழிதல் என்று சொல்லப்படும்.

பொங்கல் -  அசி போன்றவற்றைத் தனியாகவோ அன்றி, பருப்பு முதலியன கூட்டியோ கொதிநீர் வடிக்காமல் அளவாக நீர் பெய்து ஆக்குவது பொங்கல் என்று சொல்லப்படும்.

பொத்தல் - கடுகு முதலியவற்றைக் காயும் எண்ணெயில் இட்டுத் தாளித்து நீல் வெந்த அல்லது பச்சைக்கறி காய்களை அத்துடன் இட்டு வேண்டிய நேரம் அடுப்பில் இருக்கச் செய்து ஆக்குவதும் அசி, நெல், கடலை போன்றவற்றை வரையோட்டிலிட்டுப் பொயச் செய்வதும் பொத்தல் என்று சொல்லப்படும்.
மசித்தல் - கீரை, கிழங்கு போன்றவற்றை நன்கு வேக வைத்து அவற்றை மத்த்தினைக் கொண்டு மசித்துக் குழையச் செய்வது மசித்தல் என்று சொல்லப்படும்.

வடித்தல் -  அசி முதலியவற்றைக் கொதிநீல் இட்டு, வெந்த பின்னர் உப நீரை வடித்து விட்டுச் சோறாக்கல் வடித்தல் என்று சொல்லப்படும்.

வதக்கல் -  காய்கறி முதலியவற்றை எண்ணெயிலிட்டு நீர்ச்சத்து நீங்கி அவை வதஹ்கித் துவளுமாறு ஆக்குவது வதக்கல் என்று சொல்லப்படும்.

வறுத்தல் -  காய் கிழங்கு முதலியவற்றை நன்கு காயும் எண்ணெயில் இட்டு மொறமொறவென ஆகுமாறு ஆக்கல் வறுத்தல் என்று சொல்லப்படும்.

வாட்டல் - பிஞ்சுக்காய் அல்லது பசுங்கதிர் போன்றவற்றை நெருப்பிலிடாது அதன் அனலில் வாட்டிப் பதமாய்ப் பக்குவம் செய்வது வாட்டல் என்று சொல்லப்படும்.

வார்த்தல் -  நன்றாகக் காய்ந்த தோசைக்கல் போன்றவற்றில் கரைத்த மாவை வார்த்துத் தோசை, அப்பம் முதலியவற்றைச் சுடுவது வார்த்தல் என்று சொல்லப்படும்.

வெந்நீர்ப்படுத்தல் - நன்றாகக் கொதிக்கும் நீல் பழம், காய்கறி, முட்டை போன்றவற்றை இட்டு வேகும்படி செய்தல் வெந்நீர்ப்படுத்தல் என்று சொல்லப்படும்.ஷ

வேகவைத்தல் - நெருப்பிலோ, அனலிலோ, கொதி நீலோ, ஆவியிலோ, எண்ணெயிலோ, அன்றி வேறு வழியிலோ எப்பண்டத்தையும் பச்சைத் தன்மையிலிருந்து மாற்றி உண்ணத் தக்கதாய் வெந்ததாய்ச் செய்வது வேகவைத்தல் என்று சொல்லப்படும்.























Comments

Popular posts from this blog