திருக்குறளின் பெருமைகள்





1.திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812

2.    திருக்குறளின் மற்றொரு பெயர் முப்பால் ஆகும்.

3.    திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளது. அதிகாரத்திற்குப் பத்துப்பாடல் வீதம் மொத்தம் 1330 குறட்பாக்கள் உள்ளன.

4.    திருக்குறள் அறத்துபாலில் 380 குறட்பாக்கள் உள்ளன.

5.    திருக்குறள் பொருட்பாலில் 700 குறட்பாக்கள் உள்ளன.

6.    திருக்குறள் காமத்துப்பாலில் 250 குறட்பாக்கள் உள்ளன.

7.    திருக்குறள்  அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.

8.    திருக்குறளில் உள்ள சொற்களின் மொத்த எண்ணிக்கை 14000 ஆகும்

9.    திருக்குறளில் 42,194 எழுத்துகள் பயன் படுத்தப்பட்டுள்ளது

10. தமிழ் எழுத்துக்கள் 247 இல் 37 எழுத்துக்கள் மட்டுமே திருக்குறளில் இடம் பெறவில்லை

11.  திருவள்ளுவர் அனிச்சம், குவளை ஆகிய இரு மலர்களை மட்டுமே     திருக்குறளில் குறிப்பிட்டுள்ளர்


                                                            அனிச்சம் மலர்

                                                           குவளை மலர்
                                                  நெருஞ்சி


குன்றி மணி



பனைமரம்

                                                                மூங்கில்
12. திருவள்ளுவர் நெருஞ்சி பழத்தை மட்டும் தான்  சுட்டியுள்ளார்

13. திருவள்ளுவர் குறிப்பிடும் ஒரே விதை குன்றி மணியாகும்.

14. திருவள்ளுவர் பயன் படுத்தாத ஒரே உயிர் எழுத்து ஔ ஆகும்

15. திருக்குறளில் குறிப்பறிதல் என்னும் தலைப்பில் இரண்டு அதிகாரங்கள் உள்ளன

16. திருக்குறளில் வள்ளுவர் இரண்டே இரண மரங்களைத்தான் சுட்டுகிறர் அவை 
பனை,மூங்கில் மரங்களாகும்.

17. திருக்குறளில் வள்ளுவர் னி என்ற ஒரே எழுத்தை மட்டும் அதிக முறை  பயன் படுத்தியுள்ளார். னி  யை 1705 முறை பயன் படத்தியுள்ளார்




ஜி.யு. போப்


18. திருக்குறளில் வள்ளுவர் ளீ,ங என்னும் எழுத்துக்களை ஒரே ஒரு முறைதான்    பயன்படுத்தியுள்ளார்.

19. திருக்குறளில் இடம்பெறாத இரண்டு சொற்கள் தமிழ், கடவுள் ஆகும்.

20. திருக்குறளின் மூலத்தை  முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவர் ஆவார்.

21. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணக்குடவர் ஆவார்.

22.  திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் ஜி.யு.போப் ஆவார்.

23. திருக்குறள் உரையாசிரியர்களுள் பத்தாவது உரையாசிரியர் பரிமேலழகர் ஆவார். திருக்குறள் உரைகளுள் சிறந்த உரை பரிமேலழகர் உரையாகும்.

24. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது ஆகும்

25. திருக்குறலில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

26. எழுபது கோடி என்ற சொல் திருக்குறளில் ஒரு குறளில் இடம் பெற்றுள்ளது.

27. ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது

28. திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

29. திருக்குறளை 106 பேர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்கள்.



Comments

Popular posts from this blog