Posts

Showing posts from 2015
Image
      உணவாக்கல்                ஒவ்வொரு உணவையும் ஒவ்வொரு விதமாக சமைத்தல் வேண்டும். தமிழர்கள் உணவுகளை விதம் விதமாகச் சமைக்கின்ற வல்லமை உள்ளவர்கள் என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஆனால் உங்களுக்குச் சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது.   உணவை சமைக்கின்ற விதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயரினை இட்டு வழங்கியுள்ளனர் நம் முன்னோர்கள்.   இங்கு சமைக்கின்ற முறையும் அதற்கு வழங்கப்படும் பெயர்களையும் கொடுத்துள்ளேன். அவித்தல்   - ஆவியால் வேகச் செய்வது இது. இது மூவகையாகும். குழாய் முதலியவற்றுள் செலுத்தி பிட்டு முதலியன அவிப்பது பெய்தவித்தல் என்றும் முகந்து இட்டு, இட்லி போன்றவற்றை அவிப்பது இட்டவித்தல் என்றும் கட்டை, துணித் துளைகளின் வழிப்பிழிந்து இடியாப்பம் போன்றவற்றை அவிப்பது பிழிந்தவித்தல் என்றும் சொல்லப்படும். இடித்தல் - அசி முதலியவற்றை மாவாகவோ அன்றி அவலாகவோ இடித்து ஆக்குவது இடித்தல் என்று சொல்லப்படும். கலத்தல் - பல பண்டங்களைக் கலந்து நீர்மோர் போன்றவற்றை ஆக்குவது கலத்தல் என்று சொல்லப்படும். கா...
Image
உண்பதற்குத் தமிழில் வழங்கப்படும் வேறு பல சொற்கள்                     தமிழன் அறுசுவை உணவை சமைக்க மட்டு்ம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவற்றை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் தெரிந்து அதற்கு அழகிய தமிழ் சொற்களை வகைப்படுத்தி வைத்திருந்தான். இதோ அச் சொற்கள் அருந்தல் , உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல், விழுங்கல்                    இச்சொற்களை நாம் அன்றாடம் பயன் படுத்திக்கொண்டு தான் உள்ளோம். ஆனால் இவற்றை சரியான இடங்களில்தான் பயன்படுத்துகிறோமா என்பதை அறியாமலே நாம் பேசுகிறோம். ஒவ்வொரு சொற்களும் அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுவது தமிழின் சிறப்பு. இங்கு உண்பதற்கு வழங்கப்படும் சொற்கள் பயன்படுத்தும் முறையினையும் சுட்டியுள்ளேன். அருந்தல் = மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதலை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "மருந்து அருந்தினான்'). உண்ணல் = "துற்றல்' எ...
Image
தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று என்பேன். யானை என்ற ஒரு விலங்குக்கு எண்ணற்ற பெயர்கள் தமிழில் உள்ளது. அவற்றில் சில பெர்கள் மட்டுமே நம் வழக்கில் உள்ளது என்பது வேதனை தரக்கூடிய செய்தியாகும். பெற்றோர்களும், எழுத்தாளர்களும், தமிழாசிரியர்களும் நம் பிள்ளைகளுக்கு இப் பெயர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். சங்க இலக்கியங்கள் , காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் முதலியவற்றில் யானையின் பல்வேறு பெயர்கள் காணப்படுகின்றன. யானையின் தமிழ்ப்பெயர்கள் யானை/ஏனை (கரியது) வேழம் (வெள்ளை யானை) களிறு களபம் மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) உம்பர் உம்பல் (உயர்ந்தது) அஞ்சனாவதி அரசுவா அல்லியன் அறுபடை ஆம்பல் ஆனை இபம் இரதி குஞ்சரம் இருள் தும்பு வல்விலங்கு தூங்கல் தோல் கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) எறும்பி பெருமா (பெரிய விலங்கு) வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது) புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது) ஒருத்தல் ஓங்கல் (மலைபோன்றது) நாக பொங்கடி (பெரிய பாதத்தை உடையது) கும்பி தும்பி (துளையுள்ள கையை உடையத...
Image
சோழம் சோழர்களது நீண்ட வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. சங்க இலக்கிய காலம். 2. சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம். 3. விஜயாலயனுடைய மரபு புகழ்பெற்று விளங்கிய காலமான கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதலான காலம் (இதில்தான் இராஜராஜன் இராஜேந்திரன் வருவார்கள்.) 4. சாளுக்கிய-சோழ குல மன்னன் முதலாம் குலோத்துங்கனும் அவனது பின்னோரும் புகழ்பெற்று விளங்கிய கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலம். நாம் இதில் முதல் பகுதியான சங்க இலக்கிய காலத்தைப் பற்றி முதலில் பார்ப்போம். ஆதாரமாக நான் வைத்து எழுதிக் கொண்டிருப்பது, சோழர்கள், பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியது, தமிழில் மொழிபெயர்த்தது, கே.வி.ராமன். முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 955) திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான கார...