Posts

Showing posts from October, 2013
Image
                                   திங்களைப் பாம்பு விழுங்கியது             பண்டைய தமிழர்கள் கலைகள் பண்பட்டில் மட்டுமல்ல  விண் வெளி அறிவியலிலும் சிறந்து விளங்கினர். இந்தக் கூற்றை முன் வைக்க பலரும் கோவிலில் உள்ள ஒன்பது  கோள்களையும் அமாவாசை நிகழ்வினைச் சான்றாக முன்வைப்பர். ஆனால் நான் இதை புதிய சில விளக்கங்களோடு  உங்களுக்கு  விளக்க ஆவல் கொள்கிறேன்.             திருமால் பாற்கடலில் பள்ளிக் கொண்டிருப்பதாக நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்தே கூறி வருகின்றனர். பாற்கடல் என்ற கடல் ஒன்று உள்ளதா ? பாற்கடல் என்பதைப் பிரித்தால் பால் + கடல் என்று பொருள் வரும். பால் கடலில் திருமால் உறங்கிக் கொண்டு இருக்கின்றாறே? வீட்டில் வைக்கின்ற பாலே கெட்டு விடுகிறது. பால் கடல் கெட்டு, மோராகி தயிராகிவிடாதா ? அது வாடையடிக்காதா என்று இன்றைய வாண்டுகளே கேள்விகளுக்கு மேல் கேள்விகள...
                       ஆயகலைகள் அறுபத்து நான்கு v ஆடல் v   இசைக் கருவி மீட்டல் v   ஒப்பனை செய்தல் v   சிற்பம் வடித்தல் v   பூத்தொடுத்தல் v   சூதாடல் v   சுரதம் அறிதல் v   தேனும் கள்ளும் சேகரித்தல் v   நரம்பு மருத்துவம் v     சமைத்தல் v   கனி உற்பத்தி செய்தல் v   கல்லும் பொன்னும் பிளத்தல் v   கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல் v   உலோகங்களில் மூலிகை கலத்தல் v   கலவை உலோகம் பிரித்தல் v   உலோகக் கலவை ஆராயந்து அறிதல் v   உப்பு உண்டாக்குதல் v   வாள் எறிதல் v   மற்போர் புரிதல் v   அம்பு தொடுத்தல் v     படை அணிவகுத்தல் v   முப்படைகளை முறைப்படுத்தல் v   தெய்வங்களை மகிழ்வித்தல் v   தேரோட்டல் v   மட்கலம் செய்தல் v   மரக்கலம் செய்தல் v   பொற்கலம் செய்தல் v   வெள்ளிக்கலம் செய்தல் v   ஓவியம் வரைதல்...
Image
தஞ்சை இரகசி யம் சிதம்பர இரகசியத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருக்கிறோம் , அதென்ன தஞ்சை இரகசியம் ? என்று   உங்களுக்குள் கேள்வி எழுகிறதா ? தஞ்சை பெரிய கோவிலைப் பார்த்து வியக்காதவர்கள் எவரும் இல்லை . கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட அக்கோவிலைப் பற்றி எண்ணற்ற கேள்விகளும் மர்மங்களும் ,   இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன . அவற்றை எல்லாம் தஞ்சைக்குச் சென்று பல முறை ஆராய்து , ஆய்வாளர்களின் ஆய்வுகளை எல்லாம் கூர்ந்து அறிந்த பின்னரே அவை எல்லாம் உண்மைகளா இல்லை கட்டுக் கதைகளா என்பதை விளக்க இக்கட்டுரையை எழுதுகின்றேன் . தஞ்சை பெரிய கோவில் என்றாலே நம் நினைவுக்கு வருவது கோபுரத்தின் நிழல் கீழே விழாது , விமானத்தின் உச்சியில் ஒரே கல்லால் ஆன 80 டன் எடையுள்ள சிகரம் , ஒவ்வொரு நாளும் வளர்ந்து வரும் நந்தி . ஆனால் உண்மை அதுவல்ல .  இவை எல்லாம் காலம் காலமாக மக்களிடம் பரவி வந்த வதந்திகளாகும் . தஞ்சை பெரிய கோவிலின் கோபு ரத்தின் நிழல் கீழே விழும் . இதனை நண்பகல் வேளையில் கோவிலுக்குச் சென்று நீங்க...