Posts

Showing posts from March, 2015
Image
உண்பதற்குத் தமிழில் வழங்கப்படும் வேறு பல சொற்கள்                     தமிழன் அறுசுவை உணவை சமைக்க மட்டு்ம் தெரிந்து வைத்திருக்கவில்லை. அவற்றை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதையும் தெரிந்து அதற்கு அழகிய தமிழ் சொற்களை வகைப்படுத்தி வைத்திருந்தான். இதோ அச் சொற்கள் அருந்தல் , உண்ணல், உறிஞ்சல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், நுங்கல், பருகல், மாந்தல், மெல்லல், விழுங்கல்                    இச்சொற்களை நாம் அன்றாடம் பயன் படுத்திக்கொண்டு தான் உள்ளோம். ஆனால் இவற்றை சரியான இடங்களில்தான் பயன்படுத்துகிறோமா என்பதை அறியாமலே நாம் பேசுகிறோம். ஒவ்வொரு சொற்களும் அதன் தன்மைக்கேற்ப வழங்கப்படுவது தமிழின் சிறப்பு. இங்கு உண்பதற்கு வழங்கப்படும் சொற்கள் பயன்படுத்தும் முறையினையும் சுட்டியுள்ளேன். அருந்தல் = மிகச் சிறிய அளவே உட்கொள்ளுதலை இச்சொல் குறிக்கும் (உ-ம்: "மருந்து அருந்தினான்'). உண்ணல் = "துற்றல்' எ...
Image
தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று என்பேன். யானை என்ற ஒரு விலங்குக்கு எண்ணற்ற பெயர்கள் தமிழில் உள்ளது. அவற்றில் சில பெர்கள் மட்டுமே நம் வழக்கில் உள்ளது என்பது வேதனை தரக்கூடிய செய்தியாகும். பெற்றோர்களும், எழுத்தாளர்களும், தமிழாசிரியர்களும் நம் பிள்ளைகளுக்கு இப் பெயர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். சங்க இலக்கியங்கள் , காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் முதலியவற்றில் யானையின் பல்வேறு பெயர்கள் காணப்படுகின்றன. யானையின் தமிழ்ப்பெயர்கள் யானை/ஏனை (கரியது) வேழம் (வெள்ளை யானை) களிறு களபம் மாதங்கம் கைம்மா (துதிக்கையுடைய விலங்கு) உம்பர் உம்பல் (உயர்ந்தது) அஞ்சனாவதி அரசுவா அல்லியன் அறுபடை ஆம்பல் ஆனை இபம் இரதி குஞ்சரம் இருள் தும்பு வல்விலங்கு தூங்கல் தோல் கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது) எறும்பி பெருமா (பெரிய விலங்கு) வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது) புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது) ஒருத்தல் ஓங்கல் (மலைபோன்றது) நாக பொங்கடி (பெரிய பாதத்தை உடையது) கும்பி தும்பி (துளையுள்ள கையை உடையத...
Image
சோழம் சோழர்களது நீண்ட வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. சங்க இலக்கிய காலம். 2. சங்ககால இறுதிக்கும் விஜயாலய அரசமரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம். 3. விஜயாலயனுடைய மரபு புகழ்பெற்று விளங்கிய காலமான கி.பி. 9ஆம் நூற்றாண்டு முதலான காலம் (இதில்தான் இராஜராஜன் இராஜேந்திரன் வருவார்கள்.) 4. சாளுக்கிய-சோழ குல மன்னன் முதலாம் குலோத்துங்கனும் அவனது பின்னோரும் புகழ்பெற்று விளங்கிய கி.பி. பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையிலான காலம். நாம் இதில் முதல் பகுதியான சங்க இலக்கிய காலத்தைப் பற்றி முதலில் பார்ப்போம். ஆதாரமாக நான் வைத்து எழுதிக் கொண்டிருப்பது, சோழர்கள், பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி எழுதியது, தமிழில் மொழிபெயர்த்தது, கே.வி.ராமன். முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 955) திருப்புறம்பயம் போரின் போது, தஞ்சையையும் உறையூரையும் கொண்ட சிறு பகுதியைச் சோழர்கள், பல்லவர்களின் தலைமையின் கீழேயே ஆட்சி செய்து வந்தனர். ஆனால் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாகவே சோழர்களின் பலம் பல மடங்கு பெருகிற்று. இந்நிலைக்கு மிக முக்கியமான கார...
Image
சங்க காலப் புலவர்களின் பெயர்கள் 1) அகம்பன் மாலாதனார் 2) அஞ்சியத்தை மகள் நாகையார் 3) அஞ்சில் அஞ்சியார் 4) அஞ்சில் ஆந்தையார் 5) அடைநெடுங்கல்வியார் 6) அணிலாடு முன்றிலார் 7) அண்டர் மகன் குறுவழுதியார் 8) அதியன் விண்ணத்தனார் 9) அதி இளங்கீரனார் 10) அம்மூவனார் 11) அம்மெய்நாகனார் 12) அரிசில் கிழார் 13) அல்லங்கீரனார் 14) அழிசி நச்சாத்தனார் 15) அள்ளூர் நன்முல்லையார் 16) அறிவுடைநம்பி 17) ஆரியன் பெருங்கண்ணன் 18) ஆடுதுறை மாசாத்தனார் 19) ஆதிமந்தி 20) ஆரிய அரசன் யாழ்பிரமதத்தன் 21) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார் 22) ஆலங்குடி வங்கனார் 23) ஆலத்தூர் கிழார் 24) ஆலம்பேரி சாத்தனார் 25) ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் 26) ஆவூர் காவிதிகள் சகாதேவனார் 27) ஆவூர்கிழார் 28) ஆலியார் 29) ஆவூர் மூலங்கீரனார் 30) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் 31) இடைக்காடனார் 32) இடைக்குன்றூர்கிழார் 33) இடையன் சேந்தன் கொற்றனார் 34) இடையன் நெடுங்கீரனார் 35) இம்மென்கீரனார் 36) இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் 37) இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார் 38) இருந்தையூர்க...
Image
தஞ்சை பெரிய கோவில் ஓர் அறிமுகம் தமிழக வரலாற்றில், பொற்காலம் எனப் போற்றப்படும் சோழர் வரலாற்றில், மாமன்னன் ராஜராஜசோழன் சிறப்பிடம் பெற்று விளங்குகிறான். இரண்டாம் பராந்தகன் என்ற சுந்தர சோழனுக்கும், வானவன் மாதேவிக்கும் பிறந்த மைந்தன் அவன்.அருள்மொழிவர்மன் என்பது இவனது இயற்பெயர். கேரளாந்தகன், சிங்களாந்தகன், மும்முடிசோழன், சிவபாதசேகரன், திருமுறை கண்ட சோழன், சத்திரிய சிகாமணி, ராஜாஸ்ரயன் என்ற, பல சிறப்புப் பெயர்களைக் கொண்டு விளங்கினான். ""செந்திரு மடந்தை மண் ஸ்ரீராஜராஜன் இந்திர சமானன் இராஜசர் வக்ஞன்,'' என்று, திருக்கோயிலூர் கோவிலிலுள்ள ஒரு கல்வெட்டு புகழ்ந்து பேசுகிறது.ஐப்பசி மாதம் சதய நாளில் ராஜராஜன் பிறந்தான். அவனது பிறந்த நாளான ஐப்பசி சதய நாளில் திருவெண்காடு, திருப்புகலூர், எண்ணாயிரம், திருவிடந்தை, திருநந்திக்கரை, கோபுரப்பட்டி (பாச்சூர்) போன்ற பல கோவில்களில் சிறப்பான வழிபாடுகள் நடக்க, தானம் அளிக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்! தஞ்சைப் பெரிய கோவிலில் சதயத்திருவிழா, 12 நாட்கள் சிறப்பாக நடந்ததை, அக்கோவில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்நாட்களில...